Showing posts with label SelvaMurali articles. Show all posts
Showing posts with label SelvaMurali articles. Show all posts

பொறியியல் கல்லூரி மாணவர்களின் கவனத்திற்கு - (Part 2 of Future of Engineering Colleges - பொறியியல் கல்லூரிகளின் எதிர்காலம்?)

பொறியியல் கல்லூரிகளில் படித்த / படிக்கும் மாணவர்களின் அன்பான கவனத்திற்கு..

பொறியியல் படித்தால் வேலை கிடைக்காது என்ற எண்ணத்தினையும், படித்தேன் வேலையே கிடைக்கல என்ற எண்ணத்தையும் தயவுசெய்து மாற்றப் பழகிக் கொள்ளுங்கள். இந்த உலகில் நீங்கள் என்ன படித்தாலும் வேலை கிடைக்கும், படிக்காதவர்களுக்கும் வேலை கிடைக்கும். வேலை கிடைக்க நீங்கள் என்ன செய்தீர்கள் ? படிப்பு என்பது ஒரு தகுதி , அது மட்டுமே உங்கள் வேலையை கொடுத்துவிடாது. அதையும் தாண்டியது செயல் திறன். நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை உங்களை முன்பின் அறியாத ஒரு நிறுவனம் எப்படி தெரிந்துகொள்ளும். அங்கே அந்த நிமிடங்களில் உங்களை வேலைக்கு எடுக்கவேண்டிய நிறுவனத்திற்கு தெரியப்படுத்தவேண்டியது நீங்கள் எந்த அளவு செயல்திறன் மிக்கவர் என்பது


ஒரு நிறுவனம் உங்களை ஏன் வேலைக்கு எடுக்க வேண்டும்? என்ற சாதாரண கேள்வியை உங்களுக்குள் கேட்டுப்பாருங்களேன்.
உங்களுக்கு வேலை கிடைக்க வேண்டும்? ,  நிறுவனங்களுக்கு தங்கள் வேலை முடிய வேண்டும். யதார்த்தம் இவ்வளவே
ஆனால், ஏன் நிறுவனங்கள் ஆட்கள் வேண்டும் என்று, விளம்பரம் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். வேலை தேடுபவர்களும் வேலை தேடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். 
அவர்களிடம் நீங்கள் உங்களை எப்படி கொண்டு செல்வீர்கள் ? உங்களின் வேலை செய்யும் திறன் சம்பந்தப்பட்ட நிறுவனங்களை சென்றடைய நீங்கள் என்ன செய்ய வேண்டும்? என்று என்றாவது யோசித்ததுண்டா?  நிச்சயம் ஆம், என்று பதில் வரும். ஆனால் யோசித்ததை எப்படி செயலாக்குவீர்கள்? 
நாம் யோசிக்கும் எந்த ஒரு எண்ணமும் (Idea) நமக்கு எப்போதும் மனக்கிளர்ச்சியைத் தரும். நம்முடைய எண்ணங்கள் நம்மில் ஒரு கருத்து உலகத்தை மாற்றும் என்றெல்லாம் தோன்றும். ஆனால் செயல்முறைபடுத்தும் போது தெரியும் அதன் சிக்கல்கள்.

பெரும் நிறுவனங்களின் எதிர்பார்ப்பு நல்ல வேலை திறன்மிக்க வேலையாட்கள். பலர் நல்ல திறன்மிக்கவர்களாக இருப்பார்கள். சிலர் நல்ல வேலையாளர்களாக இருப்பார்கள். இந்த இரண்டையும் இணைக்கும் நபர்கள்தான் செயல்திறன் மிக்க வேலையாட்கள்.


இப்போது புரிகிறதா? நிறுவனங்கள் எதிர்பார்க்கும் வேலையாட்கள் பற்றி! சமூகத்தில் ஏற்படும் பிரச்னைகளே உங்களின் நிறுவனங்களின் மூலதனம். அந்த பிரச்னைகளை எப்படி தீர்ப்பது என்ற உங்களின் செயல்முறைகள் தான் உங்களின் எதிர்காலம்.

எனவே உங்களின் சமூக அறிவை இன்னமும் வளருங்கள். அடுத்த 5 ஆண்டுகளில் சமூகத்தின் தேவைகள் என்னவென்பதைப்பற்றி பாருங்கள்.


சிவில் மாணவனாக இருந்தால் குறைந்த விலையில், குறைந்த நேரத்தில் தரமான கட்டிடங்களை கட்டுவதை சவாலாக எடுத்துச் செய்யுங்கள். பழைய கட்டிடங்களை பழமை மாறாமல் வலுப்படுத்தும் பணிகளை முயற்சி செய்யுங்கள்.
தொலைதொடர்பு துறையில் இருக்கும் தொழில்நுட்பங்களை எப்படி மேம்படுத்தலாம். பாதுகாப்புத்துறையில் எப்படி மேம்படுத்தலாம் என்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்.


கணினி தகவல் தொழில்நுட்பத்துறையில் செயற்கை நுண்ணறிவு, ஆழ்ந்த நுண்ணறிவு பெருந்தரவக பொருட்களின் இணையம் ஆகியவை அடுத்த 5 வருடங்களில் மிகப்பெரிய வளர்ச்சி காண உள்ளது.

ஒவ்வொருத் துறையிலும் பல பிரச்சனைகள் உள்ளன. அந்த பிரச்சனைகளுக்கான தீர்வுகள்தான் உங்கள் வெற்றி.
கடையில் காசு கொடுத்து வாங்காமல் உங்களுக்கு என்ன தெரிகிறதோ அதையே செய்து காட்டுங்கள் அதுதான் உங்கள் நேர்மை.


நிறுவனங்கள் எதிர்பார்ப்பது செயல்திறன் மிக்க வேலையாட்கள். சாதாரண செல்பேசிகள் எப்படி Smartphone ஆன பின் உலகசந்தையில் பெரிய புரட்சி ஏற்பட்டதோ, அதேதான் இப்போதும், நீங்கள் சாதாரண வேலையாள் அல்ல அதிக செயல்திறனுள்ளவுன் என்று உரக்கச் சொல்லுங்கள். 

வலைப்பூக்கள் போன்றவற்றில் நீங்கள் எழுதிவாருங்கள்
இப்போது சமூக தளங்களில் உங்கள் பங்களிப்பை வைத்து மட்டுமே வேலைக்கு ஆட்கள் எடுக்கும் பல திட்டங்கள் உங்களுக்கு பயன்படும்
போன்ற இணையத்தளங்களில் நீங்களும் பங்களியுங்கள். உங்கள் சுயவிபர குறிப்பில் உங்களின் பங்களிப்பினை குறிப்பிடுங்கள்.
செய்தித்தாள்களிலும்,. இணைய இதழ்களிலும் உங்கள் கட்டுரையைகளை பதிப்பியுங்கள்.
நிச்சயம் உலகம் உங்கள் வசப்படும்

நன்றி!

தொடரும்….
செல்வ.முரளி
Part 1 : Future of Engineering Colleges - பொறியியல் கல்லூரிகளின் எதிர்காலம்?

Future of Engineering Colleges - பொறியியல் கல்லூரிகளின் எதிர்காலம்?

தமிழகம் முழுவதும் அல்ல இந்தியா முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களின் சேர்க்கை குறைவாக உள்ளதால் பொறியியல் கல்லூரிகள் பெரும் வேலை வேலைகுறைப்பை செய்து வருகின்றனர்.

ஏன் மாணவர்களிடயே பொறியியல் ஆர்வம் குறைந்து விட்டது என்று பலவிதமான ஆய்வுகள் நடைபெற்று வந்தாலும் யதார்த்த நிலையில் பல்வேறு பொறியியல் கல்லூரிகள் தாங்கள் செய்ய வேண்டியதை செய்யவேண்டியதை செய்யாமல் மறந்து விட்டனர்.



ஆம் தொழில்நுட்பத்தில் நாள் தோறும் பல புதுமைகள் புகுத்தப்பட்டு உள்ள நிலையில் அதற்கேற்றார்போல் பாடத்திட்டங்களை உருவாக்கி புதிய நுட்பங்களுக்கு ஏற்றார்ப்போல் மாணவர்களுக்கு அறிவுத்திறனை உட்டவேண்டியது  அவசியம். ஆனால் நிறுவனங்களில் காசு கொடுத்து வாங்கிய திட்டப்பணிகளுக்கு அங்கிீகாரம் கொடுத்ததால் மாணவர்கள் தங்கள் திறமையை மேம்படுத்தமுடியாத நிலையை ஏற்படுத்திவிட்டனர்.

உதாரணத்திற்கு

R மொழி கணினியில் பல புதுமைகளை புகுத்தி வருகிறது. புள்ளியியல் விபரங்களை வரைபடமாக செயலாக்கிகாட்டுவதில் இதன் பலன் அதிகமே. இது எத்தனை ஆசிரியர்களுக்கும், மாணவர்களக்கு தெரியும் ?


Bigdata - பெருந்தரவு தகவல்களை ஆராயும் இந்த நுட்பம் இன்று அதிவேகமாக எல்லாத்துறைகளிலும் பயன்பட்டுவருகிறது. 


Artificial Intelligence
செயற்கை நுண்ணறிவு மூலம் எதிர்கால உலகமே இயங்க உள்ளது. வரும் காலத்தில் மொழியியல் செயற்கை நுண்ணறிவு, மருத்துவ செயற்கை நுண்ணறிவு என்று எத்தனை துறைகள் உள்ளதோ அந்தத் துறைகள் எல்லாவற்றிலும் செயற்கை நுண்ணறிவுத்துறை வரும், எனவே இப்போதிருந்தே நிறுவனங்கள் அதற்கேற்றார் போல் செயல்பட வேண்டும்.


IOT : பொருட்களின் இணையம்
இந்தியாவில் வளர்ந்து வரும் ஸ்மார்ட் சிட்டியின் முதுகெலும்பே இந்த பொருட்களின் இணையமே. நீர், நிலம், காற்று, வானம், பூமி ஆகிய ஐம்பூதங்களும் இந்த தொழில்நுட்பத்தில் ஒருங்கிணைக்கப்படும்.

ரோபாடிக்ஸ்
இந்தத்துறை ஏற்கனவே வளர்ந்து வந்தாலும் மிகப்பெரிய மாற்றத்தை எதிர்பார்த்து உள்ளனர். இந்தத்துறையில் IOT தொழில்நுட்பம் இந்த துறைக்கு மிகவும் பயன்படும். பல நிறுவனங்கள் ரோபாட்களுக்கான மென்பொருட்களை வௌியிட்டுள்ளன.


எல்லாவற்றையும் விட கல்வி நிறுவனங்கள் தங்கள் மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்த பட்டறிவை(அனுபவ அறிவு)  கொடுப்பது அவசியம்.


நிறுவனங்களில் காசு கொடுத்து வாங்கு செயல்திட்டத்தை விட்டுவிட்டு உடனடியாக தங்கள் மாணவர்களை எல்லா தொழில்துறையோடு இணைந்து பணியாற்ற செய்வது அவசியம். அடுத்த 5 ஆண்டுகளில் உலகம், இந்தியா அல்லது பொது சமூகம் எதிர்நோக்கும் பிரச்சனைகளை என்னவென்று இப்போதே கண்டெடுத்து அதற்கான வழிமுறைகளை செயல்படுத்த வேண்டும் என்பது மிகவும் அவசியமானது.

 தொடரும்….
செல்வ.முரளி